பொதுநல அமைப்புகள், "மனித உரிமை' என்ற வார்த்தையை பயன்படுத்த, அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து, அரசிதழில் (கெசட்) வெளியிடப்பட்ட உத்தரவு விபரம்: தமிழகத்தின் பல இடங்களில், மனித உரிமை கழகம், மனித உரிமை கவுன்சில் என்ற பெயரில் அமைப்புகள் செயல்படுகின்றன. இந்த அமைப்புகளை, சங்கப் பதிவுச்சட்டம் பிரிவு 9ன் கீழ், பதிவு செய்ய முடியாது. "மனித உரிமை' என்ற பெயரில் பதிவு செய்ய முடியாது. "ஏற்கனவே இப்பெயர்களில் பதிவு செய்தவர்கள், ஆறு மாதத்திற்குள் மாற்றம் செய்ய வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment